கவிஞர் மகுடேசுவரன்

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

Magudesuwaran, a popular Tamil Poet, Writer and Author
Magudesuwaran, a popular Tamil Poet, Writer and Author

கவிஞரின் இன்றைய பதிவு

Tamil Image tells its authenticity
Tamil Image tells its authenticity

தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? பெரும்பாலும் எவ்விடங்களிலெல்லாம் வருந்தத்தக்க பிழைகள் நேரும் ? என்னுடைய நெடுநாள் கூர்நோக்கில் கண்டறிந்த பிழைநிலைமைகளை வரிசைப்படுத்துகிறேன்.

ஒரு பட்டியல் போட்டுப் பார்த்துவிடலாம்.

1). நெடில் எழுத்துகளில் எழுதவேண்டியதைக் குறில் எழுத்துகளில் எழுதுவார்கள்.

மாடு மேய்ந்தது => மடு மெய்ந்தது

கூடையோடு => குடையொடு

வெங்காயம் => வெங்கயம்

பாட்டு பாடு => பட்டு படு

புகைப்படக் களஞ்சியம்